Ernakulam to velankanni via sengottai, kollam, kottayam confirmed..
சற்று முன் தினகரன் திருநெல்வேலி நிருபர்
திரு.மாசானமுத்து அவர்கள் எனக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி ---அவருக்கு
மனமார்ந்த நன்றிகள் -- கீழே காணலாம்.
-கொல்லம் எம்.பி.பிரேமசந்திரன் பேட்டி.
தமிழக...
more... கேரளா எல்லையான செங்கோட்டைவழியாக கேரளமாநிலம் கொல்லத்திற்கு அகல ரயில்பாதை பணிகள் முடிந்து தற்போது கொல்லம்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயிலுக்கு கேரளமாநில மக்களிடம் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது.இதனைத்தொடர்ந்து கொல்லம் பாராளுமன்ற உறுப்பினர்.பிரேமசந்திரன் அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று மதுரையிலுள்ள தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பின்னர் கூட்டம் முடிந்து செங்கோட்டை வந்தார்,
செங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:கேரளமாநிலம் எர்ணாகுளத்திலிருந்து-வேளாங்கண்ணிக்கும்,எர்ணாகுளத்த ில் இருந்து திருச்சிக்கும்,புதிய ரயில்களும்,கொல்லத்தில் இருந்து புனலூர் வரை இயக்கப்ப்டும்
பயணிகள் ரயிலை தென்காசி வரை நீட்டிக்கவும்,பாலருவி எக்ஸ் பிரஸ் தென்மலை முதல் எடமன் வரை இயக்கபப்டும் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்கவும்,பாலக்காடு எக்ஸ் பிரஸ் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்கவும்,முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும்,தாம்பரம்-கொல்லம் ரயிலை ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நிறுத்தவும் (ஸ்டாப்)இந்த ரயிலை எழும்பூர் வரை நீட்டிக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும் தாம்பரம்-கொல்லம் எக்ஸ் பிரஸ் ரயிலை சுற்றுலாப்பயணிகள் விரும்பும் ரயிலாக மாற்றிட முயற்சித்து வருவதாகவும்,இந்த ரயில் முதல் நாளிலேயே வருமானம் ரூபாய்.2.07.இலட்சம் ரூபாயை ஈட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.புனலூர் ரயில் நிலையத்தினை மேம்படுத்தவும் இந்த பகுதி சபரிமலை அய்யப்பன் கோவில் வரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளை கொண்ட நிலையமாக மாற்றிட முயற்சிகளை மேற்கொள்ளபப்ட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்,